
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நிலத் தகராறில் ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் அரசு ஊழியர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (65), கட்டிட ஒப்பந்ததாரர். இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் அழகுமுத்து குடும்பத்துக்கும் இடையே நிலப் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cRJuZbD
0 Comments