Crime

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.16 கோடி மதிப்பிலான ‘மெத்தாம்பேட்டமைன்’ என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், சுங்கத் துறை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, கியூ பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் என பல்வேறு துறையினரும், கடற்கரைப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZQmMjoG

Post a Comment

0 Comments