
புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக அங்குள்ள காவல் நிலையத் துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 7-ம் தேதி லாஸ் பேட்டை போலீஸார் மற்றும் சிறப்புஅதிரடிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது 400 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் வைத்திருந்த புதுச்சேரி கருவடிக்குப்பம் மகாவீர் நகரைச் சேர்ந்த தினேஷ் (எ) வீரப்பன் (28) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MaNgz9o
0 Comments