
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கருப்பஞ்சாவடியைச் சேர்ந்தவர் செல்வம்(28). விவசாயியான இவர், டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், மகள் முறைக் கொண்ட 16 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இதற்கு, அவரது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அச்சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tnxoV84
0 Comments