
தருமபுரி மாவட்டத்தில் ஆன்லைன் முறையில் திருடப்பட்ட பணத்தை சைபர் கிரைம் போலீஸார் 48 மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் வழங்கினர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். அண்மையில் இவரது வங்கிக் கணக்கில் இருந்து இவருடைய அனுமதி பெறாமல் ரூ.2,000 பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதையறிந்த கார்த்திக், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் அளிக்க தொடர்பு எண்ணை ஆன்லைனில் தேடியுள்ளார். அதில் கிடைத்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசியவர்கள் கார்த்திக்-ன் செல்போனில் ‘எனிடெஸ்க்’ என்ற அப்ளிகேஷனை நிறுவுமாறு கூறியுள்ளனர். அவர் அதைச் செய்த சில நொடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,000 பணம் மாயமானது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார். புகார் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள்ளாக தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் அந்தப் பணத்தை மீட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dBbzuyH
0 Comments