
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பச்சைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சுப்ரீம் (23). இவர் கடந்த 9-ம் தேதி இரவு கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராக்கிப்பட்டி பிரிவு ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் முகவரி கேட்பது போல் நாடகமாடி, சுப்ரீம் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியது. சுப்ரீம் உடனடியாக காரை தனது செல்போனில் போட்டோ எடுத்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸில் சுப்ரீம் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WcNGEvl
0 Comments