
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு பொது நல மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
திருப்பத்தூர் அடுத்த கரியம்பட்டி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறோம். எங்கள் கல்லூரியில் மாணவர்கள் தங்கி படிக்க ‘மாணவர்கள் விடுதி’ அமைத்து தர வேண்டும் ’’ என தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dh0NF8P
0 Comments