
திருச்சுழி அருகே திமுக பெண் நிர்வாகி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சுழி அருகே உள்ள உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள்(52). திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மூர்த்தியும், அவரது மனைவி சோலைமணியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என நினைத்த மூர்த்தி நேற்று மாலை அவரது வீட்டுக்குச் சென்று கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Vm8fZp
0 Comments