Crime

ஆலங்காயம் அருகே கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மயில்களை விஷம் வைத்து கொத்து, கொத்தாக கொல்லும் சம்பவம் தொடர்கிறது. குரும்பட்டி கிராமத்தில் 12 மயில்களை விஷம் வைத்து கொன்றதாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. ஆண்டியப்புனூர், பூங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் மட்டும் மயில்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறதுது. சமீப நாட்களாக அருகில் உள்ள விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் பயிர்களையும் சேதப்படுத்தி யுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4h37bst

Post a Comment

0 Comments