Crime

சென்னை: திருவல்லிக்கேணி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மதன் (36). அதிமுகவில் துறைமுகம் தொகுதி 59-வது வார்டு முன்னாள் பகுதி துணைச் செயலாளராக இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திமுகவில் சேர்ந்துள்ளார். திருமணம் ஆகாத இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு தீவுத்திடல் அருகே எஸ்.எம். நகர் பகுதியில் நின்றிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 4 பேர் கும்பல் மதனை அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயம் அடைந்த மதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YjMESoN

Post a Comment

0 Comments