Crime

புதுச்சேரி லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் வசிப்பவர் ராஜகுரு (45). இவரது மனைவி கல்விக்கரசி (42). இருவரும் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் 2015-ல் இருந்து மாதாந்திர மற்றும் தீபாவளி ஏலச்சீட்டு பிடித்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் லாஸ் பேட்டை சாந்தி நகர் சிவாஜி தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்பையா (40) என்பவர் மாதாந்திர சீட்டுப்பணம் கட்டி வந்த நிலையில், ரூ.8 லட்சம் வரை சீட்டு பணத்தை எடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை சுப்பையாவிடம் கொடுக்காமல் ராஜகுருவும், கல்விக்கர சியும் காலம் கடத்தி வந்தனர்.

இந்நிலையில் தம்பதி வீட்டிலி ருந்து திடீரென மாயமாயினர். அதிர்ச்சியடைந்த சுப்பையா பல இடங்களில் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்தார். அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆபாச மாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PKx53kY

Post a Comment

0 Comments