Crime

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை வெளியிட் டுள்ள அறிக்கை:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல், போக்ஸோ, மணல் திருட்டு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் 58 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 944 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 6,58,71,640 மதிப்பிலான 6,587 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் 1,109 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sLLDEF

Post a Comment

0 Comments