
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சின்னநெற் குணம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வடிவேலு (42). இவர், நெல் மூட்டைகளுடன் கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் நேற்று முன்தினம் புறப்பட்டார். இவருடன், மற்றொரு ஓட்டுநர் அன்பழகன் (40) என்பவர் உடன் சென்றார்.
கர்நாடகா மாநிலத்தில் நெல் மூட்டைகளை இறக்கி விட்டு, அதற்கான தொகையுடன் வேலூர் வழியாக விழுப்புரம் திரும்பினார். வேலூர் மாவட்டம் கொண வட்டம் அருகே நள்ளிரவில் லாரியை நிறுத்தி விட்டு வடிவேலு தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் திடீரென இரும்பு கம்பியால் வடிவேலுவை தாக்கினர். அவரின் சத்தம் கேட்டு லாரியில் உறங்கிக் கொண்டிருந்த அன்பழகன் திடுக்கிட்டு எழுந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f0zELd
0 Comments