
விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் பகுதியில் விளைநிலப் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, ஆந்திராவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் அங்கு சோதனையிட்டதில் இரு லாரிகளில் 25 டன் ரேஷன் அரிசியும், விளைநிலத்தில் 80 மூட்டைகளில் ரேஷன் அரிசியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசியோடு இருந்த லாரியையும், 80 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விருத்தாசலம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள பணியாளர்களிடமும், ரேஷன் கடை ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3KIBzCI
0 Comments