
கோவை: கோவை போத்தனூர் போலீஸார் ஜம் ஜம் நகர் பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்த ஹசைனர் (27), புல்லுக்காடு பகுதியை சேர்ந்த மன்சூர் (20) என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 40 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.
உக்கடம் வின்சென்ட் சாலை மற்றும் புறவழிச்சாலை சாலை சந்திப்பு பகுதியில் உக்கடம் போலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, 18 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. காரில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், குனியமுத்தூர் மைல்கல் பகுதியை சேர்ந்த ஆர்.அப்துல்சமது (29), தேனி கம்பத்தை சேர்ந்த பி.வினோத்குமார் (32) என்பதும், இருவரும் கஞ்சாவைக் கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33Dcvg0
0 Comments