
கரூர் அருகே ரூ.1 கோடி கேட்டு மிரட்டி கல்குவாரி அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கல்குவாரி ஊழியர் உள்ளிட்ட 2 பேரிடம் தென்னிலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகேயுள்ள மங்களப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (65). இவருக்க சொந்தமான கல்குவாரி (கிரஷர்) கரூர் மாவட்டம் தென்னிலை அருகேயுள்ள கூனம்பட்டியில் உள்ளது. சாமிநாதன் நேற்று முன்தினம் இரவு குவாரியில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த அறையின் வெளியே தாழ்ப்போடப்பட்டிருந்த நிலையில் சாமிநாதனை நேற்று காலை காணவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y7HUBH
0 Comments