Crime

திருப்பூர்: திருப்பூரில் சாலையின் நடுவே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த தம்பதி கோபால் (50), தெய்வானை (48). இவர்களுக்கு 2 மகன்கள், மகள் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் பழக்குடோன் பகுதியில் தனியாக தெய்வானை வசித்து வந்தார். குழந்தைகள் மூவரும் ஊரில் இருந்துள்ளனர். பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தெய்வானைக்கு, மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஒருவர் ஏமாற்றியதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் அடிக்கடி காவல் நிலையங்களில் புகாரும் அளித்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dZAnMo

Post a Comment

0 Comments