Crime

மும்பை: "எதிர்பாலின நட்பு, அதாவது பெண் தோழி என்றாலே உடற்பசியை, காமத்தை தீர்க்க இருப்பவர் கிடையாது" என்று கண்டனம் தெரிவித்த மும்பை போக்ஸோ நீதிமன்றம், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், சிறுமியின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டார், அவரின் வாழ்க்கையை தொடக்கத்திலேயே அழித்துவிட்டார் என்று நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

20 வயது இளைஞர் தனது தூரத்து உறவினரின் மகளான 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மும்பை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நீதிபதி ப்ரீத்தி குமார் குலே தீர்ப்பளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32xemSj

Post a Comment

0 Comments