Crime

திருப்பூர் மாநகர் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில், கடந்தஆண்டு 14 வயது சிறுமி காணாமல்போனதாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த உறவினரான பிரபு (29), ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. திருப்பூர் வடக்கு அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்தனர். திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், பிரபுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிசுகந்தி உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் பிரபு அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமிலாபானு ஆஜரானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pGiKHM

Post a Comment

0 Comments