Crime

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே சின்ன வண்டாரியைச் சேர்ந்த 40 வயது பெண், அணைக்கரைப்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் 13.5.2013-ல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பக்கத்து தோட்டத்து உரிமையாளர் தங்கவேலு மகன் முத்துராஜ், கூலு என்பவர் மகன் முத்துராஜ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அப்பெண்னை இருவரும் அடித்துக் கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசினர்.

இது தொடர்பாக இரு முத்துராஜ்களையும் சாப்டூர் போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், அந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zaTe0F

Post a Comment

0 Comments