
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதிகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் மாயன் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர்.
வெள்ளக்கரடு என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் (35) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் ரூ.500, ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆனைமலையன்பட்டி வெள்ளக்கரடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (45) என்பவர் இந்த நோட்டுகளை மாற்றச் சொன்னதாகக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Yj36qD
0 Comments