
புதுச்சேரி லாஸ்பேட்டையில் தேவகி நகரில் வசிப்பவர் கிஷோர்குமார்(34). எண்ணெய் வியாபாரி. கடந்த 21-ம் தேதி வீட்டில் குடும்பத்தினருடன் படுத்திருந்தார். அப்போது நள்ளிரவு மதில் சுவர்மீது ஏறி வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்த கிஷோர்குமார், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, உஷாரான மர்ம நபர் அருகிலிருந்த முட்புதருக்குள் பதுங்கினார். இதனால் சுதாரித்த கிஷோர்குமார் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். விரைந்துவந்த போலீஸார் மர்ம நபரை பிடித்து சோதனையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uoHkOe
0 Comments