Crime

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடைய பெண் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பழிக்குப் பழியாக திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் வசித்து வந்தவர் பசுபதிபாண்டியன். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39pa8wu

Post a Comment

0 Comments