
நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில் ஆற்காட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து தொழிலதிபரிடம் 6 லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற புகாரில் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபரும், தனியார் கல்லூரி நிறுவனருமான செல்வகுமார் என்ற கண்ணன் (52) என்பவரது வீட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி சிலர், சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, ரூ.6 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக அவர் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37uH3ik
0 Comments