
கிண்டி பகுதியில் வீட்டின் முன்பு குதிரைப் பந்தயம் தொடர்பாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.6,500 பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களையும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரையும் கண்காணித்துக் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், அந்தந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j2Dard
0 Comments