
கோவை மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள, கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் சங்குபதி (50). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன் மனைவி கவிதா (30). இவரது மகள் சாதனா (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சங்குபதி, கவிதா, சாதனா ஆகியோர் இன்று (ஆக.19) மதியம் 4 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோயில் வழித்தடத்தில் உள்ள, மீன்பண்ணை பகுதிக்குத் துணி துவைக்கச் சென்றனர். அங்குள்ள பவானி ஆற்றின் கரையில் சங்குபதி, கவிதா துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சாதனா அருகே நின்று தண்ணீரில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iYmDEQ
0 Comments