
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலை, கொள்ளை அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டதின் பேரில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 35 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டதின் பேரில் மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி பஞ்சுப்பேட்டையைச் சேர்ந்த தணிகா (எ) தணிகைவேல் என்பவரும், அவரது வலதுகரமாகச் செயல்பட்டு வரும் கூட்டாளியான சரித்திரப் பதிவேடு குற்றவாளி வசா (எ) வசந்த் என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j8TWns
0 Comments