
களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், கார், பைக் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்துள்ள இடைக்கோட்டை சேர்ந்தவர் செலின்குமார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாக இருந்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை 02) பணி முடிந்து இரவில் வீடு திரும்பினார். உணவருந்தி விட்டு தூங்கிய நிலையில் இன்று (ஜூலை 03) அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது கார், பைக் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dEor2M
0 Comments