
உதகையில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, கரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை க்யூ பிரிவு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் முஸ்தபா (55). இவருக்கும் உதகை காந்தல் புது நகர் பகுதியைச் சேர்ந்த மார்கரேட் என்கிற மாகிக்கும் (51) 15 ஆண்டுகளாகத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. மாகி உதகை மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் சாலையோரத்தில் கடை வைத்து நடத்தி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SXH5M1
0 Comments