
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரியிடம் நூதன முறையில் செயலியைப் பதிவிறக்கம் செய்யவைத்து வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாயை மர்ம மனிதர்கள் அபகரித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி புகார் அளித்துள்ளார்.
சென்னை, மந்தைவெளியில் வசிக்கும் வருமான வரித்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் அதிகாரி ஒருவர், கடந்த 14ஆம் தேதி ஆன்லைன் மூலமாக ஸ்னாப் டீலில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டுக்கு வந்துள்ளன. அதை சோதித்தபோது அதன் தரம் தாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றபடி இல்லை, தரம் சரியாக இல்லை என்பதால் துணை ஆணையர் அப்பொருட்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j67dik
0 Comments