
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்தவடக்கு மலையம்பாக்கம், சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்ராஜ்(25), இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் மற்றும் அண்ணன்களிடம் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோவில்ராஜ் வழக்கம்போல் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வெளியே சென்று படுத்துக் கொண்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கோவில்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது அண்ணன்கள் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t5GX90
0 Comments