
பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழக சிறப்பு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. புகார் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அதுகுறித்து விசாரிக்க மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3au2X78
0 Comments