Crime

கோவை அருகே அன்னூரில், மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (18-ம் தேதி) கைது செய்தனர்.

கோவை அன்னூர் அருகேயுள்ள, வடக்கலூரைச் சேர்ந்தவர் கனகராஜ் (42), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. தோட்டப் பணிக்கு மின் இணைப்பு பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்னர், அன்னூர் பிரதான துணை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வடக்கலூர் மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்புப் பணிகளுக்கான கட்டணமாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் கனகராஜ் கட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38QWnGM

Post a Comment

0 Comments