
கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக் கூறி மயக்க ஊசி செலுத்தி கடலூரில் உறவினரிடமே நகைகளைத் திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி ராசாத்தி. இவரது அத்தை மகளான பெரம்பலூர் மாவட்டம் கீழகுடிகாட்டைச் சேர்ந்த சத்யபிரியா(31) என்பவர் லக்கூரிலுள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார். பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினரிடம் அவர்களுக்குக் கரோனா தடுப்பு ஊசி வாங்கி வந்துள்ளதாகவும், அதை செலுத்திக் கொண்டால் கரோனா வராது எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் ஊசி போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30F5hTs
0 Comments