
புதுச்சேரியில் திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் நரையூர் தனசிங்குபாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த ஓம்பிரணவமூர்த்தி - பவுனாம்பாள் தம்பதியின் கடைசி மகள் சிவபாக்கியம் (22). பிஎஸ்சி நர்சிங் படித்துள்ளார். இவருக்கும், புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகர் முதல் குறுக்குத் தெருவை சேர்ந்த தனியார் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் ஏழுமலை (எ) ராஜேஷுக்கும் (28) கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eyVUgm
0 Comments