
சேலம் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் செண்பகமாதேவி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்குமார் (36). இவர் நண்பருடன் சேர்ந்து 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கடந்த ஆண்டு மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NWnMPZ
0 Comments