
மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.78.18 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமலிங்கா நகரைச் சேர்ந்தவர் சங்கலிங்கம். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகன் ஞானசேகர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வெம்பக்கோட்யைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரது மகன் தீபன்பாரதி, காரியாபட்டி அருகே உள்ள செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி, இவரது கணவரும் விருதுநகர் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலருமான சந்திரன் ஆகியோர் பத்மாவதியை சந்தித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qwdTqK
0 Comments