
செங்குன்றம் அருகே ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள சுமார் அரை டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டேங்கர் லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக, தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் - மொண்டியம்மன் நகர் அருகே மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30EuvSl
0 Comments