
விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன் (36). பெயிண்டரான இவர் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்தார். கடந்த 4-ம் தேதி இரவு இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jH0hFT
0 Comments