
போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து(42). புதுப்பேட்டையில் கடை நடத்தி வரும் இவர், கடந்த 1-ம் தேதி கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறும் இவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் மாங்காடு போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் தான் காரில் இருப்பதாக உறவினர்களுக்கு முத்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அங்குசென்றபோது உடலில் காயங்களுடன் காரில் இருந்த முத்துவை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30JCai3
0 Comments