
தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றன. மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2F0TTKr
0 Comments