
கடலூரில் கே.என்.பேட்டையில் தடை செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான 8 டன் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா, போதைப்பாக்கு போன்ற பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இப்பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில், கடலூர் கே.என்.பேட்டையை ஒட்டிய திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iFG423
0 Comments