
ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்குக் கடத்தி வரப்பட்டு விற்பனையில் இருந்த 74 கிலோ கஞ்சாவை புதுச்சேரி காவல் துறையினர் பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்துள்ளனர்.
கரோனா காலத்திலும் புதுச்சேரியில் கஞ்சா விற்பனை படுவேகமாக நடைபெற்று வருவதாகத் தொடர்ந்து புகர்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தடுக்க காவல்துறையினர் துரிதமாக ஈடுபட்டாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கரோனாவால் வேலை இழந்துள்ள இளைஞர்கள், பள்ளி-கல்லூரி செல்லாத மாணவர்கள், சிறுவர்கள் எனக் குறிவைத்து ஒரு கும்பல் விற்பனை செய்து வருகிறது. அதிலும் கல்லூரிகள், முக்கியப் பகுதிகள், பள்ளியையொட்டிய பகுதிகளில் விற்பனை நடப்பதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jtQrqn
0 Comments